காட்டுத் தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் அறிவதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த செய்வாய்க்கிழமை மாலை கலிபோர்னியாவின் தெற்குப் பகுதியான லொஸ் ஏஞ்சலஸில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதுவரை காட்டுத் தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 35 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதி தீக்கிரையாகியுள்ளது. இதைத் தொடர்ந்து 137 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளும் தீயினால் சேதமடைந்துள்ளன.
இதனிடையே குறித்த பகுதியில் ஆட்களற்ற வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து குறித்த பகுதியில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே காட்டுத் தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் அறிவதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.