ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெயரை பயன்படுத்தி முறைகேடான வகையில் நிதி சேகரித்த சந்தேகத்தின் அடிப்படையில் மதபோதகர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வன்முறையான முறையில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டு தன்னை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் எனஅறிமுகப்படுத்திய மதபோதகர் உட்பட இருவரே யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த ஒரு வாரகாலமாக தேசிய மக்கள் சக்தியினையும் அனுர குமார திஸநாயக்காவின் பெயரைப் பயன்படுத்தி தம்மை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தியே நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லியடிநகரில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது நிதி கொடுக்க மறுத்தவர்களை அனுரவின் ஒளிப்படத்தைக் காண்பித்து பெயரைக் கூறி அச்சுறுத்தி நிதியை வலுக்கட்டாயமாக பெற்ற முற்றப்பட்ட போது வர்த்தகர்களுக்கும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டோருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.