2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06 ஆம் திகதி மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 03 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
வடமத்திய கடற்படை கட்டளையில் உள்ள SLNS கஜபாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு படகு படைப்பிரிவு பணியாளர்களால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, கடற்படையினர் சந்தேகத்தின் பேரில் டிங்கி படகு ஒன்றை இடைமறித்து, வெடிமருந்து பயன்படுத்தி பிடிபட்ட மீன்களை மீட்டனர்.
இதனையடுத்து, கப்பலில் இருந்த 03 சந்தேக நபர்களும், மீன் மற்றும் டிங்கி படகும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் பனங்கட்டிக்கொட்டு மேற்கு மற்றும் எமில் நகரை சேர்ந்த 35 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 3 பேரும் மீன் மற்றும் டிங்கி படகுகளுடன் மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
![]() |