ஜனாதிபதியின் சீன விஜயத்தினை இந்திய ஊடகங்கள் உன்னிப்பாக உற்று நோக்குவதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது இந்தியாவின் பதற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் கறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அவர்கள் நீண்டகாலமாக தென்னாசிய நாடுகள் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவை என இந்தியா கருதி வந்ததாகவும் அந்த ஊடகத்தில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க எதிர்வரும் 14ம் திகதி முதல் 17 திகதி முதல் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி , சீன ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் எனவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறி
ப்பிட்டார். இலங்கை ஜனாதிபதியின் எதிர்வரும் விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், பரஸ்பர அரசியல் நம்பிக்கையை ஆழமாக்குவதற்கும், புதிய பட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கும் சீனா தயாராக உள்ளதாகவும் சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.