இன்று (2025.01.28) காலை வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் ஏற்பட்ட நரம்பு வெடிப்பு காரணமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.