முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் வீட்டுக் கிணற்றிலிருந்து இன்று இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த 11 ஆம் திகதி காணாமல் போயுள்ளார். தொடர்ந்து அவரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்ட நிலையிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை
இந்நிலையில் இன்றையதினம் குறித்த அவரது வீட்டு கிணற்றில் சடலம் அவதானிக்கப்பட்டுள்ளது. பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சடலத்தினை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.