ஐந்து அரைசியல் வாதிகள் உட்பட ஒரு அரசியல் வாதியின் மனைவியும் கைது செய்யப்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது..
பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த கைதுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிக் விமான ஒப்பந்த மோசடி தொடர்பான விடையமா?
வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை மோசடி செய்த அரசியல்வாதி மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சுற்றுலா சபையின் முறைகேடுகளில் ஈடுபட்ட தலைவர்கள் என பலர் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மிக் விமான ஒப்பந்தத்தில் மோசடிகளில் ஈடுபட்ட பிரதிவாதிகள் குழு மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஒப்பந்தத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.