வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று(1) புதுவருட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது
கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை தலைமையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது
திருப்பலியை தொடர்ந்து புதுவருடத்தில் முதல் நாள் தொழிலை மேற்கொள்ள வேண்டியவர் தெரிந்தெடுக்கப்பட்டு கடற்பகுதியும் பங்குத்தந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டது.
புதுவருட திருப்பலியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறையாசீர் வேண்டி சென்றனர்