உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி படையினர் இன்று (05) கைது செய்துள்ளனர்.
காட்மோரில் வனத்தில் இருந்து கவரவில்லை பகுதிக்கு செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து கைது செய்து உள்ளனர்.
25 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள், 25 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆறு ஆண்கள் அடங்கியவர்கள் வனப்பகுதியில் உல்லாசமாக இருப்தாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் சந்தேகத்தின் பேரில் சாலாவ பகுதியில் உள்ள எட்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.