6 நாட்களின் பின் அகப்பட்ட சந்தேகநபர்

இளைஞர் ஒருவரை வாகனத்தால் மோதிவிட்டு சந்தேகநபர் வாகனத்துடன் தப்பிச் சென்றார். சம்பவத்தில் தேவிபுரத்தை சேர்ந்த 27 வயதுடைய வாகன சாரதி கைது

 முல்லைத்தீவில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச்சென்ற  வாகனம் 6 நாட்களின் பின் மீட்கப்பட்டுள்ளதுடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வாகனத்தின் சாரதியை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

புதுக்குடியிருப்பில் கடந்த 14 ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை வாகனத்தால் மோதிவிட்டு சந்தேகநபர் வாகனத்துடன் தப்பிச் சென்றார். காயமடைந்த இளைஞர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.  

இந்நிலையில் 6 நாட்களின் பின்னர் வாகனத்தை கண்டுபிடித்த பொலிஸார் சாரதியைக் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட சாரதி வாகனத்துடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். சம்பவத்தில் தேவிபுரத்தை சேர்ந்த 27 வயதுடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 





கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.