யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளரிடம் 3 மில்லியன் ரூபா பணம் பறித்த சம்பவம் தொடர்பில் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸாரால் சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவரும் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பிராந்திய முகாமையாளர்கள் இருவர், வாகன சாரதி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 39 முதல் 50 வயதிற்கிடைப்பட்டவர்கள் என்பதுடன் மஹையாவ, கட்டுகஸ்தோட்டை, பத்தேகம, மற்றும் மனிஹின்ன பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தள்ளது.
அவர்களிடமிருந்து 2 மில்லியன் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக்கடைக்குள் கடந்த 16 ஆம் திகதி புகுந்த சந்தேகநபர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் என பாசாங்கு செய்து உரிமையாளரைக் கைது செய்வதாக மிரட்டி நகைக்கடை உரிமையாளரிடம் 3 மில்லியன் ரூபாவைப் பெற்றுச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.