மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் இதுவரை சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக ஜோகூர் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 38 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை அந்நாட்டு மன்னர் சுல்தான் இப்ராஹிம் நெரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை தொடரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் வெள்ள நிலைமை சீரடைவதில் தாமதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.