2024 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 499 வர்தகர்களுக்கு எதிராக 2 கோடியே 58 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது என்று பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப் பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாணத்தில் 3 ஆயிரத்து 445 சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. 3 ஆயிரத்து 361 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 744 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. 903 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 946 வர்த்தகர்களுக்கு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக 57 லட்சத்து 48 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.