2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக, பெறுபேறுகளின் மதிப்பீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி நிடைபெற்ற 2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் 3 வினாக்கள் வெளியானதாக கூறப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடி நிலைகளின் பின்னர் வெளியானதாகக் கூறப்படம் 3 வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச புள்ளிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டதுடன் கடந்த 10 ஆம் திகதி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.