உலகளாவிய ரீதியில் 2024 ஆம் ஆண்டு வெப்பம் கூடிய ஆண்டாக பதிவாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி பெற்ற கோபர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது.1850 ஆம் ஆணடு முதல் வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இணங்க இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆண்டு தோறும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை அதிகரிப்பு பதிவான முதல் ஆண்டாக 2024 பதவாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கடந்த வருடம் 1.5 பாகை செல்ஷியஸால் வெப்பம் அதிகரித்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு உலகளாவிய சராசரி வெப்பநிலையாக 15.1 பாகை செல்ஷியஸால் பதிவானது. இதேவேளை நீர் ஆவியாகும் அளவும் 2024 ஆம் ஆண்டில் உயர்வடைந்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி பெற்ற கோபர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது.