மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (26) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,708.69 டொலர்களாகவும், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 75.69 டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் மதிப்பு வலுவடைந்து வருவதும், உலகளாவிய அரசியல் நகர்வுகளும் இந்த விலை மாற்றத்திற்குப் பிரதான காரணங்களாகக் கருதப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமான போக்கு நிலவி வந்த நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை அதிகரிப்பு, இலங்கை சந்தையிலும் தங்கத்தின் விலையை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் இன்றைய சந்தை மாற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன், நுகர்வோர் தங்கத்தை கொள்வனவு செய்வதில் விலை மாற்றங்களை அவதானத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *