வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் பாதையின் 290ஆம் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (31) இரவு, காங்கேசன்துறையிலிருந்து மொறட்டுவை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
