ஈரானில் சாம்பல் தான் இனி மிஞ்சும்-பேயாட்டம் ஆடும் அமெரிக்கா

 ஈரான் மீது மற்றொரு கட்ட தாக்குதலை தொடங்குவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது, இது 24 மணி நேரத்தில் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதலாகும். 

இரவு முழுவதும் இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியதாகவும், பின்னர் பகல் நேரத்தில் ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியதாகவும் ராணுவத்தின் மத்திய கட்டளை பிரிவு தெரிவித்தது. 

நேற்று (15) பிற்பகுதியில் மற்றொரு கட்ட தாக்குதல் தொடங்கியது, இது 24 மணி நேரத்தில் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் ஆகும். 

இதைத் தொடர்ந்து ஈரானின் துறைமுகங்கள் மீது மீண்டும் விதிக்கப்பட்ட முற்றுகையை மீற முயன்ற எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பலை செயலிழக்க செய்ய ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

Post a Comment