நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் உடல் சோர்வு மற்றும் அசௌகரியங்கள் குறித்து பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
