இந்தியா பீகாரில் நடைபெற்ற திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவு தொடர்பான மோதலில் 12 பேர் காயமடைந்த சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருமண விருந்தில் மட்டன் (ஆட்டிறைச்சி) பரிமாறப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலாக சிக்கன் பரிமாறப்பட்டதால் மணமக்களின் வீட்டார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மணமகன் தரப்பினருக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட மட்டனுக்குப் பதிலாக கோழி இறைச்சி பரிமாறப்பட்டபோது இந்த மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. திருமண விழா முடிந்த பிறகு அவர்கள் உணவு உண்ண அமர்ந்தபோது இது தொடங்கியது.
உணவுப் பட்டியல் குறித்த கருத்து வேறுபாடு விரைவில் இரு குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பாக மாறியது.
இந்த வாய்மொழி வாக்குவாதம் மோதலாக மாறியது, இரு தரப்பினரும் கைகளாலும் தடிகளாலும் தாக்கிக்கொண்டதில், மணமகன் தரப்பைச் சேர்ந்த ஏழுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசித் தாக்கி மோதிக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உணவுக்காகத் திருமண வீட்டையே போர்க்களமாக மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
