சற்று முன் பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ-இருவர் பலி

 

நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சியிலிருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அந்த முச்சக்கர வண்டியில் இரு முதியவர்களும் இரண்டு சிறுவர்களும் பயணித்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

காயமடைந்த இரு சிறுவர்களும் தற்போது பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment