இலங்கையில் வீடொன்றில் இருந்து வந்த துர்நாற்றம்-சென்று பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

 

காலி, கராப்பிட்டிய - மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 58 வயதுடைய திருமணமாகாதவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம் தொடர்பில் அருகில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கராப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அதற்கமைய, பொலிஸார் குறித்த வீட்டில் பரிசோதனை மேற்கொண்டபோதே குளியலறையில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

பிரேத பரிசோதனைக்காக சடலம் காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment