அடுத்து அடுத்து அதிர்ந்த பூமி-கதி கலங்கி போன நாடு

சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் உள்ள சிங்ஹாய் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்று (28.07.2026) காலை 11:16 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் 18 நிமிடங்கள் கழித்து அந்த மாவட்டத்தில் 5.8 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாக சி.இ.என்.சி குறிப்பிட்டுள்ளது.

இந்த இரு நிலநடுக்கங்களும் 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டன என்றும் மேலும் அவை கிங்ஹாயின் தலைநகரான சின்னிங்கிலிருந்து சுமார் 244 கி.மீ தொலைவில் அமைந்திருந்தன என்றும் சீன நிலநடுக்க வலையமைப்பு மையத்திடமிருந்து தகவல் வெளியாகி உள்ளது.   

Post a Comment