யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 8 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில், சிறுமியின் 18 வயது மாமா கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுமியை பாடசாலையிலிருந்து அழைத்து வர சென்ற மாமா, மீன் காட்டுவதாக கூறி, ஆட்களற்ற பற்றைக்குள் அழைத்து சென்று இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது
சிறுமி இது பற்றி வீட்டில் தெரிவித்ததை தொடர்ந்து, குடும்பத்தினர் வட்டுக்கோட்டை பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து, இளைஞன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
