டோக்கியோவில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதில் கட்டிடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தலைநகரில் உள்ள கட்டிடங்களை அதிரச் செய்தது, இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இபராகி பிராந்தியத்தில் நிலநடுக்கத்தின் மையம் 50 கிமீ (31 மைல்) ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
