நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் காரணமாக பாடசாலை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது தொலைதூர கற்றல் முறைகளை அறிமுகப்படுத்தவோ இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு (MOE) தெரிவித்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எரிபொருள் வரிசைகள் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாடசாலைகளை மூடுவது தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இது குறித்து கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நாட்டில் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து ஆராயும் பொருட்டு நேற்று (15) உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட பல அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.