கடனுக்காக இப்படியா..? இல்லத்தரசியைச் சீரழித்த நிதி நிறுவன ஊழியர்-கணவனிடம் கதறியழுத மனைவி

என்னோடு உல்லாசமா இருந்தா உன் கடன் தள்ளுபடி!! 

கடனுக்காக இப்படியா..? இல்லத்தரசியைச் சீரழித்த நிதி நிறுவன ஊழியர். 

அம்பலமான காமக் கொடூரம்.!!

Uttarakhand மாநிலம் ருத்ராபூர் பகுதியில், கடன் தள்ளுபடி செய்வதாக ஆசை காட்டி ஒரு பெண்ணை நிதி நிறுவன ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், பிரீத் விஹாரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, அதன் தவணைகளை முறையாகச் செலுத்தி வந்துள்ளார். 

இந்நிலையில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த கடன் மீட்பு முகவர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் தொடர்பு கொண்டு, தனக்கு ஒத்துழைப்பு அளித்தால் முழு கடனையும் தள்ளுபடி செய்து தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, அந்தப் பெண்ணைக் காஷிபூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்த அந்த முகவர், அங்கு அவரை வலுக்கட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

குடும்ப கௌரவம் கருதித் தன்னை விட்டுவிடுமாறு அந்தப் பெண் எவ்வளவோ கெஞ்சியும், அந்த நபர் அதைக் கேட்காமல் தனது கொடூரச் செயலைத் தொடர்ந்துள்ளார். 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகும், கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி அந்தப் பெண்ணை அவர் தொடர்ந்து நம்ப வைத்துள்ளார்.

ஆனால், பிப்ரவரி மாத இறுதியில் வங்கியிலிருந்து கடன் மீட்பு நோட்டீஸ் வந்ததைக் கண்டு அந்தப் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். 

அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, கணவர் விசாரித்தபோது நடந்த கொடுமைகள் அனைத்தையும் கண்ணீருடன் விவரித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள அந்த நிதி நிறுவன ஊழியரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.