குருபகவான் கிட்டதட்ட ஒவ்வொரு 13 மாதத்திற்கும் ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். குருபகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது வக்ர பெயர்ச்சியால் இருக்கும் குருபகவான் மார்ச் 13-க்குப் பிறகு தனது நேரடி இயக்கத்தைத் தொடங்கப்போகிறார்.
இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் நன்மைகளை வழங்கினாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தைப் உயர்த்தப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானின் நேரடி இயக்கத்தால் மகத்தான அதிர்ஷ்டத்தை அடையப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
துலாம்: இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்கலாம், மேலும் புது விஷயங்களில் முதலீடு செய்வது சாதகமான பலன்களை அளிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கடந்த கால பிரச்சினைகள் மற்றும் வாக்குவாதங்கள் இப்போது முடிவுக்கு வரலாம். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும், மேலும் அவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
கும்பம்: குருபகவான் கும்ப ராசியின் 5-வது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான நன்மைகள் கிடைக்கப்போகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த காலக்கட்டத்தில் நல்ல செய்தியைப் பெறலாம். வியாபாரிகள் பெரிய லாபங்களை எதிர்பார்க்கலாம், அதே நேரத்தில் வேலையில் உள்ளவர்கள் பதவி உயர்வுகள் அல்லது ஊதிய உயர்வுகள் பற்றிய நேர்மறையான செய்திகளைப் பெறலாம். மொத்தத்தில் இது நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் முன்னேற ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.
மீனம்: மீன ராசியின் 4-வது வீட்டில் குருபகவான் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் அவர்கள் பல நேர்மறையான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள். மிதுன ராசிக்காரர்கள் பணத்தை வெற்றிகரமாக சேமிக்க முடியும். அவர்களின் ஆரோக்கியம் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.



