நாட்டிலுள்ள அரச மற்றும் அனைத்து தனியார் பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகின்ற நிலையில் நாளை (14) முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மார்ச் 3 ஆம் திகதி தொடங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அரச மற்றும் அனைத்து தனியார் பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகின்ற நிலையில் நாளை (14) முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மார்ச் 3 ஆம் திகதி தொடங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது..அத்துடன் 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
க.பொ.த. சாதாரண தரத்திற்கு இம்முறை 382,249 பாடசாலை பரீட்சார்த்திகளும் 69,214 தனியார் பரீட்சார்த்திகளும் என 451,463 பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
