வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மோதிய கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று குருநாகல் - நாரம்மல வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாரம்மல நோக்கி அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த மோதலின் பலத்தினால் மின்கம்பம் முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.
அதேநேரம், குருநாகல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் விழுந்து கிடந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
.jpg)