பட்டமளிப்பு விழாவானது இன்றையதினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த பட்டமளிப்பு விழா தொடர்ச்சியாக நான்கு தினங்களாக இடம்பெற்று வருகிறது.
இந்த முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.
அத்துடன் மருத்துவ பீடத்தில் ஒருவர் ஏழு தங்கப் பதக்கங்களையும், முகாமைத்துவ பீடத்தில் ஒருவர் ஏழு தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டதுடன், விழிப்பலனற்ற இருவரும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
