மும்மூத்திகளுள் ஒருவரான சிவபெருமானுக்கு உகந்த நாள் தான் மகா சிவராத்திரி. இந்த சிவபெருமான் தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், பக்தர்களைக் காக்கவும் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். இந்த ஒவ்வொரு அவதாரமும் சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளன.ஆனால் சிவபெருமான் இவ்வளவு அவதாரங்களை எடுக்க முக்கிய நோக்கமே மனிதர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றுவது தான். மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சிவபெருமானின் 10 முக்கியமான அவதாரங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பசுபதிநாதர்
சிவபெருமானின் இந்த வடிவம், உயிர்கள் அனைத்தின் மீதும் சிவபெருமான் கொண்ட கருணையை எடுத்துக்காட்டுகிறது. மனிதர்கள், விலங்குகள் மற்றும் இயற்கை சூழல் ஆகியவற்றுக்கிடையேயான பிணைப்பை இந்த அவதாரம் அடையாளப்படுத்துகிறது. இயற்கையுடன் இணைந்து நல்லிணக்கத்துடன் வாழ இந்த வடிவம் ஊக்கமளிக்கிறது. இந்த பசுபதிநாதரைப் போற்றி வணங்கும் தளம் தான் நேபாளத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோவில்.
நடராஜர்
சிவபெருமானின் நடராஜர் வடிவம், தாண்டவம் ஆடும் கோலத்தில் சித்தரிக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தில் நிகழும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய சுழற்சிகளைக் குறிக்கிறது. நடராஜர் சிலை, சுடர்விட்டு எரியும் நெருப்பு வளையத்தால் சூழப்பட்டிருக்கும். இது பிரபஞ்சத்தின் மறுபிறப்பையும், அறியாமையின் அழிவையும் வலியுறுத்துகிறது. அறியாமை மற்றும் மாயைகளை உருவாக்கும் அபஸ்மாரா என்ற அசுரனை நடராஜர் வடிவில் சிவன் கட்டுப்படுத்தினார்.
அர்த்தநாரீஸ்வரர்
சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வரர் அவதாரத்தில், சிவன் ஆண் மற்றும் பெண் ஆற்றலின் ஐக்கியத்தையும் ஒருங்கிணைப்பையும் குறிக்கிறார். சிவனும் பார்வதி தேவியும் இணைந்து, பாதி பெண், பாதி ஆணாக இந்த வடிவம் சித்தரிக்கப்படுகிறது. ஆண் மற்றும் பெண் சக்திகளின் சிறந்த இணக்கத்தை இது அடையாளப்படுத்துகிறது. சிவனின் (உணர்வு) மற்றும் சக்தியின் (ஆற்றல்) ஐக்கியம் இல்லாமல், படைப்பும் வாழ்க்கையும் முழுமையடையாது என்பதை இந்த அவதாரம் வலியுறுத்துகிறது.
மகாகாலன்
சிவபெருமானின் அழிக்கும் அம்சமாகவும், காலத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் சக்தியாகவும் மகாகாலன் அறியப்படுகிறார். இந்த அவதாரத்தில் சிவன் பக்தர்களுக்கு வலிமையான பாதுகாவலராகவும், தர்மத்தின் காவலராகவும் கருதப்படுகிறார். மஹாகாலேஷ்வர் கோவில், மகாகாலனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு மகாகாலனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
பைரவர்
சிவபெருமானின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றான பைரவர், பாதுகாப்பிற்கும் அழிப்பிற்கும் உரியவராகக் கருதப்படுகிறார். இவர் திரிசூலத்துடனும், கோபமான முகத்துடனும் சித்தரிக்கப்படுகிறார். அறியாமை, அகந்தை மற்றும் பயம் ஆகியவற்றை அழிப்பவராக பைரவர் திகழ்கிறார். பைரவரை வணங்குவது பக்தர்களுக்கு தைரியம், பலம் மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.
தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி சிவபெருமானின் மற்றொரு வடிவமாகும். இவர் உயர்ந்த ஆசானாக, அதாவது குருக்களுக்கெல்லாம் குருவாக அறியப்படுகிறார். இவர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் கோலத்தில் சித்தரிக்கப்படுகிறார். இந்த வடிவம், ஞானம் மற்றும் தன்னை உணர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அறிவுத் தேடலில் இருப்பவர்களுக்கான குருவாகவும் தட்சிணாவீரபத்ரர்
சிவபெருமானின் ஒரு போர்வீரர் வடிவம் தான் வீரபத்ரர். சதி தேவி தன்னை மாய்த்துக் கொண்ட போது, கோபமடைந்த சிவபெருமான் வீரபத்ரரை உருவாக்கினார். இந்த உக்கிரமான வடிவம், தர்மத்தின் வலிமையையும் நீதியையும் குறிக்கிறது. தார்மீகக் கொள்கைகளைப் பாதுகாக்கவும், அநீதியை எதிர்க்கவும் பக்தர்களுக்கு இந்த அவதாரம் தூண்டுதலாக அமைகிறது.மூர்த்தி இருக்கிறார்.
வீரபத்ரர்
சிவபெருமானின் ஒரு போர்வீரர் வடிவம் தான் வீரபத்ரர். சதி தேவி தன்னை மாய்த்துக் கொண்ட போது, கோபமடைந்த சிவபெருமான் வீரபத்ரரை உருவாக்கினார். இந்த உக்கிரமான வடிவம், தர்மத்தின் வலிமையையும் நீதியையும் குறிக்கிறது. தார்மீகக் கொள்கைகளைப் பாதுகாக்கவும், அநீதியை எதிர்க்கவும் பக்தர்களுக்கு இந்த அவதாரம் தூண்டுதலாக அமைகிறது.
அகோரர்
அகோரர் சிவபெருமானின் துறவற வடிவமாகவும், அழிப்பவராகவும் கருதப்படுகிறார். சிவபெருமானின் உருமாற்றும் மற்றும் கடுமையான தன்மையின் சின்னமாக அகோரர் திகழ்கிறார். இடுகாட்டுடன் தொடர்புடைய இந்த வடிவம், மரணத்தை இறுதி யதார்த்தமாக ஏற்றுக் கொள்வதையும், பௌதிக உலகப் பற்றுகளிலிருந்து விடுபடுவதையும் வலியுறுத்துகிறது. பிறப்பு-இறப்பு சுழற்சியை ஏற்கவும், பயத்தை வெல்லவும் அகோரர் பக்தர்களை ஊக்குவிக்கிறார்.
ருத்ரன்
ருத்ரன் சிவபெருமானின் மற்றொரு உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இந்த ருத்ரன் சண்டமாருதத்தின் கடவுளாக அறியப்படுகிறார். வேத காலத்தின் ஆரம்பகால சிவ வடிவமான ருத்ரன், இயற்கையின் கட்டுப்பாடற்ற மற்றும் ஆக்ரோஷமான அம்சங்களைக் குறிக்கிறது. வேட்டை, புயல்கள் மற்றும் காட்டுப் பகுதிகள் இவருடன் தொடர்புடையவை. மறுபிறப்பிற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் அழிவின் தூய்மைப்படுத்தும் சக்திக்கான ஒரு குறியீடாக ருத்ரன் விளங்குகிறார்.
கால பைரவர்
பெயருக்கேற்ப, கால பைரவர் காலத்திற்கும் மரணத்திற்கும் உரிய இறைவன். சிவபெருமானின் மிகவும் உக்கிரமான வடிவங்களில் இந்த அவதாரமும் ஒன்று. இந்த வடிவம், மனிதர்கள் தங்கள் இருப்பின் நோக்கத்தையும், ஆன்மீக வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள ஊக்குவிக்கிறது. வாழ்க்கையின் ஆழமான அம்சங்களைப் புரிந்துகொள்ளவும், பயத்தை வெல்லவும் காலபைரவரை வணங்க வேண்டும்.










