யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(10) இடம்பெற்ற தொடருந்து விபத்தில், படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர், கொட்டடி பகுதியை சேர்ந்த சிவராசா சிவலக்சன் எனும் 23 வயதுடைய இளைஞர் என்றும் தெரியவந்துள்ளது.
