பொதுவாக ஜோதிடம் மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. என்ன நடந்தாலும் அவர்களுக்கு ஜோதிட பலன்கள் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஜோதிடத்தின்படி, குறிப்பிட்ட சில நாள்ப்பட்ட நோய்களின் தாக்கம் சனியின் கோரச் செயல் என கூறப்படுகிறது.
சனி தன்னுடையில் இருந்து மாறும் குறிப்பிட்ட ராசிக்கு அசுபமான பலன்களை வாரி வழங்குவார்கள். ஏனெனின் சனி பகவான், கர்மா, தாமதம், ஒழுக்கம் மற்றும் துன்பத்தின் கிரகமாவார்.
அந்த வகையில், ஜாதகத்தில் சனி பகவான் ஆட்டம் ஆரம்பித்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
சனி பகவான் எனக் கூறும் பொழுதே சிதைவு போன்ற மோசமான செயல்முறைகள் தான் நினைவுக்கு வரும். இவர் பலவீனமாக இருக்கும் சமயத்தில் எதிர்மறையான தாக்கங்களை அதிகமாக காட்டுவார்.
உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தி அதிகரித்து பலவீனமான தாக்கங்கள் அதிகமாக ஏற்படும். உதாரணமாக சனியின் பார்வை பட்ட ஒருவர் நாள்ப்பட்ட நோயில் கூட அடிபட வாய்ப்பு உள்ளது. இதனால் தான் உயிரை காவு வாங்கும் புற்றுநோயை சனி பகவான் ஏற்படுத்துகிறார் என பலரும் கூறுகிறார்கள்.
அதே போன்று செவ்வாய், ராகு அல்லது கேது கிரகங்களும் அசுபமானது என ஜோதிடம் எச்சரிக்கிறது. நோய்கள், எதிரிகள் மற்றும் அன்றாட போராட்டங்களை சனி பகவான் ஆறாம் வீட்டில் இருந்து செய்கிறார்.
மரணம், மாற்றம் மற்றும் நாள்பட்ட நோய்களின் தாக்கங்களை 8 ஆவது வீட்டில் இருந்து செய்கிறார். இந்த இரண்டு கட்டங்களிலும் சனி பகவான் இருந்தால் குறித்த ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கை நரகமாகி விடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே.
