கொழும்பு Swimming Clubஇல் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்ததில் 8 வயது மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிற்காக சென்றிருந்த நிலையில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.
முறைப்பாட்டு அளிக்கும் போது, சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.