மஹியங்கனை - பதுளை வீதியின் மாபகடவெவ அருகே பயணித்த கார் ஒன்று மகாவலி வியன்ன கால்வாயில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரி அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து கால்வாயில் கவிழ்ந்த காரை விரைவாகவும் மிகுந்த முயற்சியுடனும் மீட்டனர்.
எனினும் காருக்குள் இருந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் அம்புலன்ஸ் மூலம் மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.