இந்தோனேசியாவின்(indonesia) தனிம்பார் தீவுகள்(Tanimbar Islands) பகுதியில் இன்று திங்கட்கிழமை(14) ரிக்டர் அளவுகோலில் 6.7 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் தென்கிழக்கு பகுதியில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 110 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கம்
இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) வழங்கிய தகவலின்படி, இந்த நிலநடுக்கம் முற்பகல்11:20 மணியளவில் இந்திய நேரப்படி ஏற்பட்டது.
காயங்கள், கட்டமைப்புகளுக்கு சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
இந்தோனேசியாவின் தேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) நிலைமையைக் கண்காணித்து வருகிறது, மேலும் குடிமக்கள் அமைதியாக இருக்க வேண்டும், ஆனால் சாத்தியமான பின்விளைவுகளுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.