அரசு ஊழியர்களுக்கு இன்று விடுமுறை

 தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரச ஊழியர்களுக்கு இன்றைய தினம் (07) கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.  

தேர்தல் ஆணைக்குழுவினால் அனைத்து அரச நிறுவனங்களதும் நியதிச்சட்ட சபைகளதும் தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025.05.06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வாக்கெண்ணும், தேர்தல் முடிவுகளை அட்டவணைப்படுத்தும், குறித்த பணிகளில் உதவிச் சேவைகளை வழங்கும் கடமைகளில் ஈடுபட்டு அதற்கான வரவுச் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.