பணியமர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.
நேற்று (16) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்றைய தினம் நீண்ட தூர சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இன்று காலை வேளையில் 23 ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று அனைத்து இரவு நேர அஞ்சல் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.