இடு காட்டுக்கு காணி கேட்டு, சடலத்துடன் போராட்டம்

இடு காட்டுக்கு காணி கேட்டு, சடலத்துடன் ​போராட்டம் முன்னெடுக்கப்பட்ட சம்பவம், வட்டவளையில், வியாழக்கிழமை (29) ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

வட்டவளையில் உள்ள கரோலினா தோட்டத்தின் ஒரு பகுதியான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களே சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் தோட்டத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசிப்பதாகவும், தங்கள் தோட்டத்தில் இறப்பவர்களை அடக்கம் செய்ய மயானம் இல்லை என்றும், தங்கள் தோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஹட்டன் ஓயா அருகே உள்ள மயானம் ஒரு தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தோட்டத்தில் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட மயானத்தில் நான்கு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும், அந்த நிலம் ஒரு தனிநபருக்குச் சொந்தமானது என்றும், அந்த நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படாததால் பிங்கோயா தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில், தனது தோட்டத்தில் உள்ள ஒரு தனியார் நில உரிமையாளர் தற்காலிகமாக அடக்கம் செய்வதற்காக ஒரு நிலத்தை வழங்கியுள்ளார் என்றும், அந்த நிலத்தில் அடக்கம் செய்ய முடியாது என்பதால், தங்கள் தோட்டத்தில் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய காணி வழங்குமாறு கோருகின்றனர்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.