கருங்கல்லால் மகன் தாக்கியதில் சித்தப்பா பலி

கருங்கல்லால் முகத்திலேயே தாக்கியதில், சித்தப்பா மரணமடைந்த சம்பவம், வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய ரணவராவ பிரதேசத்தில், கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை   கொல்லப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட நபர் ரந்தெனிய, ரனவர பகுதியைச் சேர்ந்த தேவயலகே விஜேரத்ன (52) ஆவார். பொலிஸார் நடத்திய விசாரணையில், பழைய தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

 இறந்தவரின் உடலுக்கு அருகில் ஒரு பெரிய கருங்கல்லும் கிடந்துள்ளது. சந்தேக நபரும் அவரது சித்தப்பாவும் ஒன்றாக மது அருந்திக்கொண்டிருந்தனர், இருவருக்கும் இடையே ஒரு பழைய தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, உறவினரான சித்தப்பாவை அந்த நபர் அடித்து உதைத்துள்ளார். சித்தப்பா தரையில் விழுந்த பிறகு, அவர் அருகிலுள்ள ஒரு கருக்கல்லை எடுத்து சித்தப்பாவின்  முகத்தில் பலமுறை அடித்தார். அவர், இறந்துவிடவே, அங்கிருந்து சந்தேகநபர் தப்பியோடியுள்ளார் என்றும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.  

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.