இலங்கையிலும் விமான விபத்து

ரத்மலானை விமான நிலையத்தில் இன்று, பயிற்சி விமானி ஒருவர் இயக்கிய சிறிய பயிற்சி விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

கடினமான தரையிறக்கத்திற்குப் பிறகும், அந்த விமானி எவ்விதக் காயமுமின்றித் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விமானம் சேதமடைந்ததுடன், விபத்தைத் தொடர்ந்து ரத்மலானை விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

விமானத்தை அகற்றி, ஓடுபாதையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேலும் விமான விபத்துச் சம்பவத்தையடுத்து இரத்மலானை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Post a Comment