சற்று முன் அதிர்ந்த பூமி-மக்களின் நிலை

 

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இன்று  (16) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதன் மையப்புள்ளி, பாலு நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் பதிவாகிவுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

உடனடியாக உயிர்சேதம் அல்லது பெரிய அளவிலான பொருட்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Post a Comment