இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

 

வெசாக் பண்டிகைக் காலத்தில்தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் வைத்திருப்போர் கூடுதல் கவனத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தங்களது தங்க நகைகள் உள்ளிட்ட தங்களது மதிப்புமிக்க பொருட்களைத் திருடர்களிடமிருந்து பாதுகாக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகைக்காலத்தில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் சமய நடவடிக்கைகள் நடைபெறுவதை உறுதிசெய்ய, சில சிறப்பு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

நடனம் ஆடுதல், முகக்கவசம் அணிந்திருத்தல், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்ளுதல், பொது இடங்களில் பிறருக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் துன்புறுத்தும் வகையில் இசை வாத்தியங்களை ஒலிரவிடுதல், கோயில்கள் மற்றும் பந்தல்களுக்கு அருகில் பொருத்தமற்ற இசை அல்லது பாடல்கள் போன்றவற்றினை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், ஒலிபெருக்கிகளைக்கொண்டு பிறருக்கு இடையூறு விளைவிக்காத வகையில் நடந்துகொள்ளுமாறும், அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்ட நடைமுறையின்படி அனுமதி பெறுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment