யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இணுவில் வடகிழக்கு பூவோடைப் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் உள்ள கிணற்றிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை கிணற்றில் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர் இணுவில் பகுதியில் கிணற்றுக்குள் சடலமாக உள்ளார்
மோட்டார் சைக்கிள் இலக்கம் தெரிந்தவர்கள் அடையாளம் காண உதவவும்.


