விவாகரத்து கிடைத்ததால் மகிழ்ச்சி : 9 கி.மீ தரையில் விழுந்து வணங்கி நூதன யாத்திரை சென்ற இளைஞர்..

 விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக இளைஞர் ஒருவர், 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரையில் விழுந்து வணங்கி யாத்திரை மூலம் கடவுளுக்கு நன்றி தெரிவித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போதெல்லாம் திருமண உறவு என்பது முந்தைய காலத்தில் இருந்ததைப் போல அவ்வளவு வலுவாக இருப்பது கிடையாது என்பது அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையின் மூலம் தெரிய வருகிறது. முன்பெல்லாம் திருமண பந்தத்தில் முறிவு என்பது மிகவும் அரிதானதாக இருந்தது. ஆனால் தற்போதெல்லாம் விவாகரத்து, மறுமணம் என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டதை பார்க்க முடிகிறது

பொதுவாக விவாகரத்து என்பது ஒரு வேதனையான முடிவு என்றாலும், சிலர் அதனை கொண்டாடித் தீர்க்கின்றனர். தாங்கள் அனுபவித்த பல நாள் மனவேதனை, நெருக்கடி, மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டதை கொண்டாடும் வகையில் கேக் வெட்டுவது, பொது இடத்தில் நடனம் ஆடுவது, பால் அபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவியதையும் பார்க்க முடிந்தது.

அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததற்காக கோவிலுக்கு 9 கிலோ மீட்டர் தூரம் தரையில் விழுந்து வணங்கியபடி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளா

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் நர்கோரியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோகேஷ் (வயது 25). இவர் டெல்லியில் கட்டிட உள் அலங்கார வடிவமைப்பு துறையில் வேலை பார்த்து வந்தார். ஜோகேஷ்-க்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு தனது மனைவியை டெல்லிக்கு அழைத்துச் சென்ற ஜோகேசுக்கு குறைந்த அளவில் வருமானம் கிடைத்ததுடன், நிலையற்ற வேலை கிடைத்து வந்ததாலும் பொருளாதார ரீதியாக கஷ்டத்தை அனுபவிக்க நேர்ந்தது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் ஜோகேஷ் திருமண வாழ்க்கையில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். தனது மனைவியை பிரிய விரும்பிய அவர் பரஸ்பர முறையில் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வகையில் ஜோகேஷ்க்கு அண்மையில் விவாகரத்தும் கிடைத்தது.

தனக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக சொந்த ஊரான பான்பூரில் உள்ள புகழ்பெற்ற பத்வா மாதா கோவிலுக்கு தண்டவ யாத்திரை மேற்கொள்வதாக யோகேஷ் வேண்டிக் கொண்டுள்ளார்.

'தண்டவ யாத்திரை' என்பது நெடுஞ்சான் கிடையாக தரையில் விழுந்து விழுந்து வணங்கி செல்வதாகும். அதாவது விழுந்து கும்பிட்டபடியே யாத்திரை மேற்கொள்ளும் முறையாகும். இதனை அடுத்து ஜோகேஷ்-க்கு விவாகரத்து கிடைத்ததால் தண்டவ யாத்திரையை மேற்கொண்டார். அதன்படி உள்ளூர் நிர்வாகத்திடம் அவர் அனுமதி கோரினார். பின்னர் விரதம் இருந்து யாத்திரையை தொடங்கினார். 9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அந்த யாத்திரையை பக்தி கோஷங்களுடன் 12 மணி நேரத்திற்கு நெடுஞ்சான் கிடையாக தரையில் விழுந்து வணங்கி கடந்து சென்று, கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

உள்ளூர் நிர்வாகம் அவருக்கு 2 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது. இந்த யாத்திரையின் போது குடும்ப உறுப்பினர்களும் அவருடன் சென்றனர். வழிநெடுகிலும் பலரும் ஜோகேஷின் செயல் குறித்து ஆச்சரியத்துடன் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

கோவிலை அடைந்தபோது ஜோகேஷ், ரத்தம் வடிந்த முழங்கால்கள் மற்றும் சோர்வு, களைப்புடன் காணப்பட்டார். இருந்தாலும் அவர் முகத்தில் விடுதலை பெற்ற உணர்வு பிரதிபலித்தது.

நவீன திருமணங்களால் ஏற்படும் மன அழுத்தங்கள் உறவுகள், உணர்ச்சி, சுமைகளாக மாறும்போது சிலருக்கு கடவுள் நம்பிக்கை ஒரு இறுதி புகலிடமாக மாறுகிறதா? என்பது குறித்த கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.