2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து பரீட்சை திணைக்களத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் நாளை (31.03) அல்லது நாளை மறுநாள் (01.04) வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த வருடம் நவம்பர் 10ஆம் திகதி தொடங்கிய உயர்தரப் பரீட்சையில் சுமார் மூன்று இலட்சம் மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இருந்தபோதிலும், டித்வா புயல் காரணமாக, பல பாடங்களின் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டு தொடர்புடைய பரீட்சைகள் கடந்த ஜனவரி 12 முதல் 20 வரை நடத்தப்பட்டன.அதனைதொடர்ந்து, உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகளுகம் 16 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.
