முன்னைநாள் துணுக்காய் பிரதேச சபையின் வருமான பரிசோதகர்.மற்றும் துணுக்காய் முத்துமாரி அம்மன் ஆலய தர்மகத்தா அவர்கள் பாம்பு கடிக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான திருநாவுக்கரசு கிருபாகரன் வயது 55 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்
இவர் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான பரிசோதகராக தற்போது கடமை ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
