கட்டார் தனது எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய எல்.என்.ஜி ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதத்தை வகிக்கும் வளைகுடா நாடு, அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் முக்கிய தொழில்துறை தளங்களில் உற்பத்தியை நிறுத்தியது.
இந்த இடையூறு உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் கவலைகளைத் தூண்டியுள்ளது.குறிப்பாக இதன் காரணமாக விநியோக பற்றாக்குறை குறித்த அச்சங்களுக்கு ஏற்ப எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஐரோப்பாவின் மொத்த எரிவாயு விலைகள் கிட்டத்தட்ட 50 சதவீதம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஆசிய எல்.என்.ஜி விலைகள் கிட்டத்தட்ட 39 சதவீதம் உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடுவை கட்டார் அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
