சுவிஸ்லாந்தில் ஓடும் பேரூந்தை பெற்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த பயணி
மேற்கு சுவிட்சர்லாந்தின் ப்ரிபர்க் (Fribourg) மாகாணத்தில் உள்ள கெர்சர்ஸ் (Kerzers) நகரில், பயணி ஒருவர் பேருந்திற்குள் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததில் பேருந்து முழுமையாக எரிந்து சாம்பலானதோடு 6 பேர் உயிரிழந்தனர்.
நேற்று (10 )மாலை 6:25 மணியளவில் நிகழ்ந்த இந்த பயங்கரச் சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் தவிர 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்; அவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் ஒரு திட்டமிட்ட 'தன்னார்வச் செயல்' (Voluntary act) எனச் சந்தேகிக்கும் காவல்துறையினர், இதன் பின்னணியில் பயங்கரவாதச் சதி அல்லது தற்கொலை முயற்சி ஏதேனும் இருக்குமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
